சரபோஜி கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம், வாழ்க்கை வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் வளாக நேர்முகத் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம், வாழ்க்கை வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் வளாக நேர்முகத் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இதில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரு நிறுவனங்கள் இக்கல்லூரியைச் சார்ந்த பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., பி.பி.ஏ. மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்குக் கல்லூரி முதல்வர் தி. அறிவுடைநம்பி பணி நியமன ஆணை வழங்கினார். கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வே. நாகஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com