தஞ்சாவூர்
சோழபுரத்தில் நாளை மக்கள் குறைதீர் கூட்டம்
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் பிப். 16-ஆம் தேதி மக்கள்குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் பிப். 16-ஆம் தேதி மக்கள்குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாஜலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணத்தை அடுத்த சோழபுரத்தில் பிப். 16-ஆம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கும்பகோணம் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சுகாதார அலுவலர், கும்பகோணம் கால்நடைத்துறை உதவி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர்.
இப்பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, அலுவலர்களிடம் நேரடியாக வழங்கி, உடனுக்குடன் தீர்வு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.