பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ப.தண்டாயுதபாணி (57). இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு அரசு பயணிகள் விடுதி எதிரில் சூப்பர் மார்க்கெட் (பல்பொருள் அங்காடி) நடத்தி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை இவர் கடையின் வாசல் கதவு பூட்டை உடைத்து, கடையினுள் நுழைந்த மர்ம நபர் அங்குள்ள அலமாரியை கள்ளச் சாவி போட்டு திறந்து, அதிலிருந்த ரொக்கம் ரூ.3 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் விசாரிக்கின்றனர்.