நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் குறை தீர் கூட்டம்

"தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பிப். 16-ம் தேதி பகல் 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் குறை தீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

"தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பிப். 16-ம் தேதி பகல் 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் குறை தீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 
இக்கூட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பூதலூர், திருவையாறு ஆகிய வட்டங்களைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியரிடம் நேரடியாக அளிக்கலாம். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய அலுவலர்களால் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். 
எனவே, இந்த வாய்ப்பை தஞ்சாவூர் வருவாய் கோட்டத்தைச் சார்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362-236791 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்' என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com