பாபநாசம் அருகே அனுமதியின்றிஆற்றிலிருந்து மணல் அள்ளிவந்த மூன்று மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பாபநாசம் அருகே சுந்தரபெருமாள்கோவில் அரசலாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாசலம் மற்றும் வருவாய்த் துறையினர்அனுமதியின்றிஅரசலாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த மூன்று மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து சுவாமிமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.