குடந்தையில் உலக தாய்மொழி நாள் கருத்தரங்கம்

குடந்தை பொன்னி இலக்கியச் சுற்றத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு காலந்தோறும் தமிழ் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

குடந்தை பொன்னி இலக்கியச் சுற்றத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு காலந்தோறும் தமிழ் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு பேராசிரியர் பிலோமின்ராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் மணி வரவேற்றார். இதில் செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வேதகிரி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் குடந்தை அரசு கல்லூரியின் முன்னாள் தேர்வு நெறியாளர் அரங்கநாதன், வழக்குரைஞர்கள் கவிதா, ராம்மோகன்ராஜ், கவிஞர்கள் அயூப்கான், செருகுடி செந்தில்குமார், பாவலர் பூவையார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிறைவில் பேராசிரியர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com