ஏஆர்ஆர் கல்விக் குழுமங்களின் சார்பில் கும்பகோணம் ஏஆர்ஆர் மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பாடல்கள், கவிதைகள் வாசித்தனர்.
விழாவில் அனைவருக்கும் பள்ளியின் தாளாளர் அம்மா பொங்கல் பரிசு வழங்கினார். ஏஆர்ஆர் மெட்ரிக் பள்ளியின் தலைமையாசிரியை சி. மல்லிகா வரவேற்றார். பள்ளி முதல்வர் ப. காயத்ரி, ஏஆர்ஆர்எஸ்எல் வித்யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் ஆர். நரசிம்மன், ஏஆர்ஆர்எஸ்எல் நர்சரி பிரைமரி பள்ளியின் தலைமையாசிரியை எஸ். உஷாராணி, நிர்வாக அலுவலர் எஸ். ராஜமாணிக்கம், பொது தொடர்பு அலுவலர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.