தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் நகரில் இருந்தும், சுற்றுப்புற ஊர்களில் இருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், மதுரைத் தமிழ்ப் பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகக் கீழ்திசைப் படிப்புகள் துறைத் தலைவர் என். கண்ணன் நடுவர்களாகச் செயல்பட்டனர். இப்போட்டியில் சர். சிவஸ்வாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். பவித்ரா முதலிடமும், தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.எஸ். தேவஸ்ரீ இரண்டாமிடமும், திருமகள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ. பிரிஸ்சில்லா ஜாஸ்மின் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ. 3,000, ரூ. 2,000, ரூ. 1,000 பரிசு வழங்கப்பட்டன. மேலும், தஞ்சாவூர் பி.வி. செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பி. மனோன்மணி, கே. அஞ்சலி, திருமகள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ. துளசிபாய் ஆகியோருக்கு ஊக்கப் பரிசாக ரூ. 500 வழங்கப்பட்டது. இவர்களுக்குப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககப் பேராசிரியர் என். சேஷாத்ரி பரிசுகளை வழங்கினார்.
விழாவில் ஸ்ரீகுருராஜ ஆச்சார்ய சுவாமிகள், சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் டி. ராம்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.