பள்ளி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

பாபநாசம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பாபநாசம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான எஸ்.ராஜசேகர் தலைமை வகித்து மாணவிகளிடையே சட்ட கல்வி மற்றும் மாணவிகளின் கடமைகள் குறித்து பேசினார். 
 இதில், வழக்குரைஞர்கள் அரியராஜபூபதி, சிவகுமார், மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமுக்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் (பொறுப்பு) மனோகரன், வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வலர் தனசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com