ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக வியாழக்கிழமை இயக்க திட்டச் செயலாக்க கருவிகள் பற்றிய பயிற்சிப் பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் முனைவர் தே.மலர்விழி தலைமையுரையாற்றினார். துறைத் தலைவர் ரோஐட் வரவேற்றார். பாண்டிச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் குமரவேலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி பயிலரங்கை நடத்தி முதுநிலை கணினி பயன்பாட்டியல் மற்றும் கணினி அறிவியல் துறை மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் இயக்க திட்டச் செயலாக்க கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறையை தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கணினி அறிவியல் துறையை சேர்ந்த காவேரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.