மாவட்டத்துக்கு ஒரு முதியோர்  இல்லம் அமைக்க வலியுறுத்தல்

மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சேவை இல்லத்தில் இப்பேரவையின் பொதுக் குழு மற்றும் சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
சேவை இல்லத்தில் செயல்படும் பள்ளிக்கு என உருவாக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்கப்பட வேண்டும். 
செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கத் தமிழக முதல்வர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவமனையுடன் கூடிய சித்த மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையின் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலர் மு. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com