கும்பகோணம் ஒன்றியம் மூப்பக்கோயில் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வட்டாட்சியர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இளமாருதி, மண்டல துணை வட்டாட்சியர் சண்முகம் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்களிடமிருந்து 38 மனுக்கள் பெறப்பட்டு, 17 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள மனுக்கள் அந்தந்த துறைக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.