அரசுப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.புனல்குளத்தில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் இளைஞர்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
புனல்குளத்தில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், வாசன் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ச. நடராஜன் தலைமை வகித்தார்.
முகாமைக் கல்லூரிச் செயலர் உரு. ராசேந்திரன் தொடங்கி வைத்தார். இதில், 400-க்கும் அதிகமான மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்று, பயனடைந்தனர்.
கல்லூரி முதல்வர் ஜே. அற்புத விஜயசெல்வி, துணை முதல்வர் ச. சிவகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணாமலை, கல்லூரி செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் ஓ. ஆல்பர்ட் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com