ஒரத்தநாட்டில் வரும் 18-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஒரத்தநாடு மின் வாரிய செயற்பொறியாளர் ச.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒரத்தநாடு மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வையாளர் தலைமையில் வரும் வியாழக்கிழமை (ஜன.18) காலை 10.30 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெற உள்ளது.
இதில், ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு, ஒக்கநாடு கீழையூர், பின்னையூர், பொய்யுண்டார்கோட்டை, கண்ணுகுடி, மேலஉளூர், சாலியமங்கலம், தஞ்சை மாரியம்மன்கோயில், அம்மாப்பேட்டை, சூரக்கோட்டை மற்றும் பனையக்கோட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களை சேர்ந்த பகுதிகளின் மின் நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.