பேராவூரணியில் பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி-சேலை வழங்கல்

பேராவூரணி நகர் ஆனந்தவல்லி வாய்க்கால் அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி நகர் ஆனந்தவல்லி வாய்க்கால் அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துக்கிருஷ்ணன், சங்கீதா, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மு.சீனிவாசன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன், கிராம பிரமுகர்கள் எம்.எஸ்.நீலகண்டன், கணேசன், கொன்றை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com