தஞ்சாவூரில் நாளை தமமுக மாநாடு: வாகன வழித்தடம், நிறுத்துமிடம் அறிவிப்பு

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ள

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (தமமுக) மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களின் வாகனங்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்கள், நிறுத்துமிடம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் வழித்தடத்தில் (நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து) மாநாட்டுக்கு வரும் வாகனங்களை மாரியம்மன் கோயில் ரவுண்டானா வழியாகத் தேசிய நெடுஞ்சாலையில் பட்டுக்கோட்டை புறவழிச்சாலை, நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை, டான்டெக்ஸ் ரவுன்டானா, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை சென்று திரும்பிப் புதிய சுற்றுச்சாலை, பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகருக்குச் சென்று வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
பட்டுக்கோட்டை வழித்தடத்தில் (திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து) மாநாட்டுக்கு வரும் கட்சி வாகனங்களைப் பட்டுக்கோட்டை ரவுண்டானா, தேசிய நெடுஞ்சாலை அடைந்து நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை, டான்டெக்ஸ் ரவுண்டானா, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை சென்று திரும்பி, புதிய சுற்றுச்சாலை வழியாகப் பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
கும்பகோணம் வழித்தடத்தில் (திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து) வரும் கட்சி வாகனங்கள் பாபநாசம், அய்யம்பேட்டை வழியாக பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, அம்மன்பேட்டை ரவுண்டானா, புதிய சுற்றுச்சாலை ரயில்வே மேம்பாலம், பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்த மைதானத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்.
திருவையாறு வழித்தடத்தில் (அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து) மாநாட்டுக்கு வரும் கட்சி வாகனங்கள் அம்மன்பேட்டை ரவுண்டானா வந்து புதிய சுற்றுச்சாலை வழியாக புதிய ரயில்வே மேம்பாலம், பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
திருச்சி வழித்தடத்தில் (திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து) வரும் கட்சி வாகனங்களை செங்கிப்பட்டி, வல்லம், ஆலக்குடி அணுகுசாலை, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். 
புதுக்கோட்டை வழித்தடத்தில் (புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து) வரும் கட்சி வாகனங்களை மேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை சென்று திரும்பி புதிய சுற்றுச்சாலை, பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
இந்த அனைத்து வாகனங்களும் வந்த வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும். இந்த மாநாட்டுக்குக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக எவ்வித வாகனங்களும் வர அனுமதி இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com