மணியரசனைத் தாக்கியவரின் புகைப்படம் வெளியீடு

தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படுபவரின் 

தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படுபவரின் புகைப்படத்தை மாவட்டக் காவல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தனது நண்பருடன் சென்னைக்குச் செல்வதற்காக ரயிலடிக்கு ஜூன் 10-ம் தேதி இரவு 9 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவர்களைப் பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மணியரசன் சென்ற வாகனத்தின் மீது மோதியதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, மணியரசனிடம் இருந்த கைப்பையை இருவரும் பறித்து சென்றனர். 
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.  
இந்நிலையில், இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிசிடிவி கேமராவில் பதிவான நபரின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்புகைப்படத்தில் உள்ள நபரைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக வல்லம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு 94454 44006 என்ற எண்ணுக்கோ அல்லது தஞ்சாவூர் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்துக்கு 04362 - 251266 என்ற எண்ணுக்கோ அல்லது மருத்துவக் கல்லூரி காவல் ஆய்வாளருக்கு 94981 62854 என்ற எண்ணுக்கோ அல்லது குற்றச் சிறப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளருக்கு 94981 62745 என்ற எண்ணுக்கோ தகவல் தெரிவிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com