பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அதிராம்பட்டினம் காவல் சரகம், கீழப்பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.அன்புச்செல்வன் (60). கடந்த மார்ச் 4 ஆம் தேதி தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அன்புச்செல்வனை அங்குள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த ஏராளமான மலைத்தேனீக்கள் கூட்டமாக வந்து கொட்டியுள்ளன.
இதனால் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அன்புச்செல்வன் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 11) இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து அன்புச்செல்வனின் மனைவி அமுதா (55) அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.