தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை தூக்கிட்ட நிலையில் இருந்த இளைஞர் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.
தஞ்சாவூர் மேல வீதி அருகேயுள்ள அப்சண்ணா வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் கொய்யா மரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தூக்கிட்ட நிலையில் தொங்கினார். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.