தஞ்சாவூர்
பள்ளி வேன் மீது பேருந்து மோதல்
திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதியது.
திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதியது.
தஞ்சாவூர் கரந்தையில் உள்ள தனியார் பள்ளி வேன் செவ்வாய்க்கிழமை காலை குழந்தைகளை ஏற்றிக் கொண்டு அம்மன்பேட்டை வழியாக அரசூருக்குச் சென்றது. பின்னர், பஞ்சாரம் கிராமத்துச் சென்றுவிட்டு, அம்மன்பேட்டை பிரதான சாலைக்கு வந்த இந்த வேன் மீது திருவையாறில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் நகரப் பேருந்து மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைமேடையைக் கடந்த வேன் குடிசை வீட்டில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்குக் காயம் இல்லை.இதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.