வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மார்ச் 25-ஆம் தேதியும், பல்லக்கு திருவிழா ஏப். 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சிறப்புப் பேருந்துகள் மார்ச் 24-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப். 1-ஆம் தேதி வரையிலும் விழாப் பேருந்துகள் இரவு,
பகல் முழுவதும் இயக்கப்படவுள்ளன. இப்பேருந்துகள் கும்பகோணம் - வலங்கைமான், நீடாமங்கலம் - வலங்கைமான், தஞ்சாவூர் - வலங்கைமான், குடவாசல் - வலங்கைமான், பாபநாசம் - வலங்கைமான், மன்னார்குடி - வலங்கைமான் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.