தஞ்சாவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே விளார் சாலை எஸ்.ஆர். காலனியை சேர்ந்தவர் எம். நமச்சிவாயம் (52). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவர் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்றார். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய இவர் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். மேலும், பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.