திட்டமிட்டபடி வரும் 25-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்றார் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.
ம. நடராஜனின் உடல் அடக்கத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் தினகரன் மேலும் கூறியது: திருச்சியில் வரும் 24 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. இக்கூட்டம் ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சையில் வரும் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதம் திட்டமிட்டபடி நடைபெறும். எங்கள் அணியின் பெயரை தாற்காலிகமாக மாற்றி வைத்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். அதே போல, மற்ற நிர்வாகிகளும் அதே பொறுப்புகளிலேயே உள்ளனர் என்றார் டிடிவி. தினகரன்.