புதுப்பிப்பு பணிக்காக தஞ்சாவூர் - திட்டை ரயில்வே கேட் மூடல்

தஞ்சாவூர் அருகே திட்டை - தஞ்சாவூர் இடையே உள்ள ரயில்வே கிராசிங் புதுப்பிக்கும் பணி நடைபெறவுள்ளதால் மார்ச் 25 முதல் 27-ம் தேதி வரை கேட் மூடப்படுகிறது.

தஞ்சாவூர் அருகே திட்டை - தஞ்சாவூர் இடையே உள்ள ரயில்வே கிராசிங் புதுப்பிக்கும் பணி நடைபெறவுள்ளதால் மார்ச் 25 முதல் 27-ம் தேதி வரை கேட் மூடப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: திட்டை - தஞ்சாவூர் ரயில் நிறுத்தங்களுக்கு இடைப்பட்ட ரயில்வே பாதையைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.  எனவே,  மார்ச் 25-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், 26,  27-ம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அப்பாதை மூடப்படுகிறது. எனவே, மாற்றுப் பாதையாக தஞ்சாவூர் சுற்று வட்டப் பாதை மற்றும் தஞ்சாவூர் நகரின் வழியாகப் பொதுமக்கள் பயன்படுத்திடவும், ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com