கும்பகோணம் வடக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் கும்பகோணம் ராஜன் தோட்ட வளாகத்தில் மேற்பார்வை பொறியாளர் த.நா. சங்கரன் முன்னிலையில் மே 19 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் செட்டிமண்டபம், சுவாமிமலை, திருப்புறம்பியம், பட்டீஸ்வரம், திப்பிராஜபுரம், நாச்சியார்கோவில், செம்மங்குடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம், பந்தநல்லூர், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்கள், தங்களுக்குள்ள குறைகளை நேரில் வந்து தெரிவித்து, தீர்வு பெறலாம் என கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் சு. குணசீலன் தெரிவித்துள்ளார்.