பட்டுக்கோட்டையில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

பட்டுக்கோட்டை வட்டத்தில் 1427 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்குகள் முடித்தல்) மே 25 தொடங்கி, ஜூன் 12 வரை தினசரி காலை 9 மணிக்கு (சனி, ஞாயிறு,

பட்டுக்கோட்டை வட்டத்தில் 1427 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்குகள் முடித்தல்) மே 25 தொடங்கி, ஜூன் 12 வரை தினசரி காலை 9 மணிக்கு (சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகள் நீங்கலாக) 10 நாள்கள் நடைபெற உள்ளது.
தேதி வாரியாக விவரம்: மே 25- குறிச்சி சரகம், மே 29 -திருச்சிற்றம்பலம் சரகம், மே 30 -அதிராம்பட்டினம் சரகம், மே 31- தம்பிக்கோட்டை சரகம், ஜூன் 1- நம்பிவயல் சரகம், ஜூன் 5- பெரியக்கோட்டை சரகம், ஜூன் 6 -துவரங்குறிச்சி சரகம், ஜூன் 7- மதுக்கூர் சரகம், ஜூன் 8-ஆண்டிக்காடு சரகம், ஜூன் 12- பட்டுக்கோட்டை சரகம். ஜமாபந்தி அலுவலரான தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜி. ரவிச்சந்திரன் மனுக்களைப் பெற்று தீர்வு அளிக்கவுள்ளார். எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் அளித்து பயன் பெறுமாறு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி. சாந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com