வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் வியாழக்கிழமை கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் வியாழக்கிழமை கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரில் தெற்கு அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சில கடைகள் வியாழக்கிழமை காலை அடைக்கப்பட்டன. பின்னர், பகல் 11 மணியளவில் கடைகள் திறக்கப்பட்டன.
இதனிடையே, தொப்புள் பிள்ளையார் கோயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பேரவையின் மாநகரத் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, இணைச் செயலர் ரவி, மாவட்டப் பொருளாளர் ஆத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுக்கூரில்...
பதஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பேருந்து நிலையம் அருகே பல்வேறு கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மக்கள் விடுதலை இயக்க நிர்வாகி கவிமுருகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கூர் ஒன்றியச் செயலர் சிதம்பரம், மாவட்டக் கவுன்சிலர் காசிநாதன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கூர் ஒன்றியச் செயலர் பாரதிமோகன், தமிழக மக்கள் விடுதலை இயக்க பொதுச்செயலர் தங்க.குமரவேல் ஆகியோர் பேசினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பேராவூரணி, ஒரத்தநாட்டில்...
 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரை கண்டித்தும், நிலைமையை சிக்கலாக்கிய ஆட்சியரை பணி நீக்கம் செய்யவேண்டும்.
இதற்கு தார்மிக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பேராவூரணியில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் அண்ணாசிலை அருகே புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன் தலைமை வகித்தார். த.ம.பு.க நிறுவன தலைவர் அரங்க.குணசேகரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, சிபிஐ ஒன்றியச்செயலாளர் பன்னீர்செல்வம், திராவிடர் விடுதலைக்கழகம் சித. திருவேங்கடம், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் திலீபன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி மோட்ச குணவழகன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சேக் இப்ராஹீம்ஷா, மதிமுக சேது ஒன்றியச்செயலாளர் வ. பாலசுப்பிரமணியம், தமுஎகச கிளைத்தலைவர் சமந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரத்தநாட்டில்... ஒரத்தநாடு பேருந்து நிலையம் எதிரே மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மணி, ஒரத்தநாடு நகர செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com