அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றம்

ஒரத்தநாடு வட்டம் திருவோணம் பகுதியில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த சர்கார் பட பிளக்ஸ் போர்டு உள்ளிட்ட 25 பிளக்ஸ் போர்டுகளை வியாழக்கிழமை போலீஸார் அகற்றினர்.

ஒரத்தநாடு வட்டம் திருவோணம் பகுதியில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த சர்கார் பட பிளக்ஸ் போர்டு உள்ளிட்ட 25 பிளக்ஸ் போர்டுகளை வியாழக்கிழமை போலீஸார் அகற்றினர்.
திருவோணம் ஒன்றியம்,  வெட்டுவாக்கோட்டை, காரியாவிடுதி, புதுவிடுதி, திருவோணம், மூவர் ரோடு , ஊரணிபுரம் ஆகிய பகுதிகளில் சர்கார் படத்தின் பிளக்ஸ் மற்றும் திருமண பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து திருவோணம் போலீஸார் உத்தரவிட்டும் பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்படவில்லை. இதையறிந்த திருவோணம் உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீஸார்,  திருவோணம் பகுதியில் 25 இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளை  அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com