கும்பகோணத்தில் சொற்பொழிவு

கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணனின் 14-ம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணனின் 14-ம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சரஸ்வதி கான சபா செயலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நாராயணனின் உருவப்படத்துக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், பிரிமியர் குழுமத் தலைவர் செளந்தரராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உணவே என்ற தலைப்பில் சித்த மருத்துவர் சிவராமன்,  உணர்வே என்ற தலைப்பில் மனித வள ஆற்றாளர் சுஜித்குமார் சொற்பொழிவாற்றினர்.
நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் என். காமகோடி, இயக்குநர் மோகன்,  இன்டகிரேட்டட் எண்டர்பிரைசஸ் நிறுவன தலைவர் வைத்தியநாதன், வங்கி பயிற்சி கல்லூரி முதல்வர் சீனிவாசன்,  டாக்டர் வெங்கட்ராமன்,  சரஸ்வதி கான சபா துணைச் செயலர் கிருஷ்ணசாமி,  புலவர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com