கும்பகோணத்தில் நவ. 11-இல் மாரத்தான் போட்டி

கும்பகோணத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் ஆரோக்கியத்துக்கான தேசிய பிரசார மாரத்தான் போட்டி நவ. 11-ம் தேதி நடைபெறவுள்ளது.

கும்பகோணத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் ஆரோக்கியத்துக்கான தேசிய பிரசார மாரத்தான் போட்டி நவ. 11-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா வியாழக்கிழமை தெரிவித்தது:
பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, ஆரோக்கிய மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மக்களுக்கு உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியை வலியுறுத்தி ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது.
இதன்படி,  நிகழாண்டு நவ. 11-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பிரசாரம் பல்வேறு  இடங்களில் நடைபெறும்.
இதில், முதல் நிகழ்ச்சியாக நவ. 11-ம் தேதி காலை 7 மணிக்கு மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் 5 கி.மீ.  மாரத்தான் போட்டி கும்பகோணம் செட்டி மண்டபம் நெடுஞ்சாலை வளைவில் தொடங்கி பழைய மீன் சந்தை வரை நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் இருபாலருக்கும் முதல் பரிசாக ரூ. 4,000-ம்,  இரண்டாம் பரிசாக ரூ. 3,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 1,000-ம்,  சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இப்போட்டியில் அனைவரும் கட்டணமின்றி கலந்து கொள்ளலாம் என்றார் முகமது அலி ஜின்னா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com