தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறிய வேலைநாடுநர்கள் ஜன. 24-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2011, 2012, 2013, 2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் (1.1.2011 முதல் 31.12.2016 வரை) தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2016 வரை புதுப்பிக்கத் தவறிய வேலைநாடுநர்களுக்குப் புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக தங்களது பதிவை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இணையவழி வாயிலாகவோ அல்லது தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வேலைநாள்களில் நேரில் புதுப்பித்துக் கொள்ளலாம். இச்சிறப்புப் புதுப்பித்தல் சலுகை 2019, ஜன. 24-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். அதன் பிறகு புதுப்பிக்க இயலாது.