துபை நிறுவனத்துக்காக அக். 14-இல் ஆட்கள் தேர்வு

துபை நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கான ஆள்கள் தேர்வு முகாம் தஞ்சாவூரில் அக். 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

துபை நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கான ஆள்கள் தேர்வு முகாம் தஞ்சாவூரில் அக். 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்புக் கழகம் சார்பில் அக். 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் துபை நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு கொத்தனார், ஆபரேட்டர், தச்சர் மற்றும் போர்மேன் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது.
இதில்,  இரண்டு ஆண்டு கால பணி அனுபவமுள்ள 27 வயது முதல் 45 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி,  ஈ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஆண் வேலை நாடுநர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு ரூ. 23,000 - 38,000 மாத ஊதியமும், இலவச இருப்பிடம் மற்றும் அயல்நாட்டின் சட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.c‌o‌m என்ற வலைதளத்திலும், 8220634389, 9566239685 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com