புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில கையுந்துப் பந்து (வாலிபால்) போட்டியில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதல் இடம் பிடித்தனர்.
17 வயதுக்குள்பட்டோருக்கான மூத்தோர் (சீனியர்) பிரிவில் 11 அணிகள் பங்கேற்றன. இப்பிரிவில் மாணவி சம்யுக்தா தலைமையிலான பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி மாநில அளவில் முதலிடம் பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு அணவயல் பாரத் பால் நிறுவனத்தின் தலைவர் கணேசன் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணம், சீருடைகள் வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் சி.கஜானாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டினர்.