மாநகராட்சியின் சில பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு குடிநீர் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சியின் 14 ஆவது வார்டு முதல் 26 ஆவது வார்டு வரையிலான பகுதிகளில் செப். 11, 12 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சியின் 14 ஆவது வார்டு முதல் 26 ஆவது வார்டு வரையிலான பகுதிகளில் செப். 11, 12 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ப. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பிரதான குழாய்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், 14 ஆவது வார்டு முதல் 26 ஆவது வார்டு வரையிலான பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com