மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ரூ.1.35 லட்சம் திருட்டு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள பூப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (33).

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள பூப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (33). தொழிலாளி. இவரது மனைவி கனகா கர்ப்பிணியாக உள்ளார். இவர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார். இவரது அறுவை சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம், கொலுசு, செல்லிடப்பேசி, கைக்கடிகாரம் ஆகியவற்றை பையில் வைத்து, தலையணைக்குக் கீழே கனகா திங்கள்கிழமை இரவு வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பார்த்தபோது பையைக் காணவில்லை. 
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரித்தனர். இதில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்ம நபர் மருத்துவமனையில் உள்ள இரு கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடிவிட்டு, கனகா தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பணப் பையைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com