தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே எலி மருந்து கலந்த தக்காளியை அறியாமல் சாப்பிட்ட இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருவையாறு அருகேயுள்ள எட்டரைவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் சிவனேசன் (30). இவர் செப். 5-ம் தேதி வீட்டில் இருந்த தக்காளியைச் சாப்பிட்டார். அடுத்த நாளிலிருந்து இவருக்குத் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதுகுறித்து இவர் தனது பெற்றோரிடம் செப். 10-ம் தேதி கூறினார். அப்போதுதான் எலியைக் கொல்வதற்காகத் தக்காளி பழத்தில் எலி மருந்து கலந்து வைக்கப்பட்டதும், அதை அறியாமல் சிவனேசன் சாப்பிட்டுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவனேசன் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருவையாறு போலீஸார் விசாரித்தனர்.