கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அய்யம்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அய்யம்பேட்டை நகரம் முழுவதும் வழுத்தூர், பசுபதிகோயில், வீரசிங்கம்பேட்டை, வயலூர், ராமாபுரம், கணபதிஅக்ரஹாரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வரும் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.