முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவுச் செய்தி அறிந்து, அதிர்ச்சியில் மரணமடைந்த பேராவூரணி வட்டம், வலப்பிரமன்காட்டை சேர்ந்த முன்னாள் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சி.முத்துலிங்கம் குடும்பத்துக்கு திமுக சார்பில் குடும்பநல நிதி உதவியாக ரூ. 2 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது .
தஞ்சை மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான
துரை. சந்திரசேகரன், உயிரிழந்த முத்துலிங்கம் வீட்டுக்கு சென்று அவரது மனைவி சுமதியிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது, முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணாதுரை, திமுக பேராவூரணி ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் என். அசோக்குமார், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், ஆகியோர் உடனிருந்தனர்.