தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பெரியார் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் லோகேஷ் (16). இவர் நகரில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை மாலை குளிப்பதற்காகச் சென்றார். அப்போது, லோகேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை நண்பர்கள், பெற்றோர்கள் தேடினர். ஆனால், அவரை காணாததால், கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, லோகேஷை தேடும் பணியில் தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.