நாதன்கோவிலில் செப். 17 இல் ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம்

கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு வரும் 17 ஆம் தேதி ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடைபெறுகிறது.

கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு வரும் 17 ஆம் தேதி ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடைபெறுகிறது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் 17 ஆம் தேதி வளர்பிறை அஷ்டமி என்பதால் செண்பகவல்லி தாயாருக்கு காலை ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமும், தொடர்ந்து மூலவர் உற்ஸவம்,  திருமஞ்சனம்,  தாயார் புறப்பாடும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கர்ய சபா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com