திருவோணத்தில் பண்ணைய திட்ட முகாம்

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் வட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஒரத்தநாடு வட்டம், திருவோணம் வட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்படி, கிளாமங்கலம் , தோப்புவிடுதி, அக்கரைவட்டம், சில்லத்தூர், வடக்குகோட்டை, தெற்குகோட்டை, வெட்டுவாக்கோட்டை, அதம்பை(தெற்கு), அனந்தகோபாலபுரம்(தெற்கு), உஞ்சியவிடுதி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில், திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி, திருவோணம் வட்டார வேளாண்மை அலுவலர் வெங்கடாஜலம், துணை வேளாண்மை அலுவலர் கந்தசாமி, தோட்டக்கலை அலுவலர் ஜானகிராமன் ஆகியோர் பேசினர்.
மேலும், கிராமங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சம்பத்குமார், முருகேஷ், ரூபன்ராஜ், வெங்கடேஷ், விக்னேஷ்வரன், ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் வாசுதேவன், உதவி தொழில் நுட்ப மேலாளர் ரெத்தினம், நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com