திருச்சியில் ரூ. 8 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசியா மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 8 லட்சம் தங்கத்தை சுங்கத் துறையினர் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மலேசியா மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 8 லட்சம் தங்கத்தை சுங்கத் துறையினர் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பு நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் திருச்சிக்கு வந்த பயணிகளை சுங்கத் துறையினர் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். இதில் கொழும்பைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தை தனது உடைமைகளுக்குள் மறைத்து எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. இதேபோல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த பெங்களூரைச் சேர்ந்த உமர்பாருக் என்ற பயணி, தனது டிராலி பேக்கின் சக்கரங்களுக்குள் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com