கல்லூரிப் பேருந்து மோதி 3 வயது குழந்தை சாவு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரிப் பேருந்து மோதியதில் 3 வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.திருச்சி டிவிஎஸ் டோல்கேட், உஸ்மான் அலி தெருவைச் சேர்ந்தவர்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரிப் பேருந்து மோதியதில் 3 வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட், உஸ்மான் அலி தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (33). இவரது மனைவி மீனா. இவர்களது மகன் ஆகாஷ் கண்ணா (3). சனிக்கிழமை காலை அருண்குமார் தனது இருசக்கர வாகனத்தில் மகன் ஆகாஷ் கண்ணாவை முன்புறம் அமரவைத்துக் கொண்டு, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, குட்ஷெட் மேம்பாலத்திலிருந்து மாத்தூர் நோக்கிச் சென்ற பொறியியல் கல்லூரிப் பேருந்து அருண்குமார் வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்திலிருந்து இருவரும் கீழே விழந்தபோது, குழந்தை ஆகாஷ் கண்ணா பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தது. அருண்குமார் உயிர்தப்பினார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேருந்து மீது கல்வீசி தாக்கியதில், அதன் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.
விபத்து குறித்து, திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com