திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நிலத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தொட்டியம் அருகேயுள்ள எம்.களத்தூரைச் சேர்ந்த ராஜுக்கும் (42), அதே ஊரைச் சேர்ந்த வீரமலை மகன் ராஜேந்திரனுக்கும் (59) நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில், ராஜு மனைவி ராணியை (37), ராஜேந்திரன் தாக்கியதாகவும் அதை தட்டிக்கேட்ட ராணியின் தம்பி சந்திரசேகரை (30), ராஜந்திரன், சிவக்குமார், மணிவேல் ஆகிய மூவரும் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் பலத்த காமயமடைந்த சந்திரசேகர், தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக சந்திரசேகரின் சகோதரி ராணி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவக்குமார், மகாமணியை தேடிவருகின்றனர்.