திருச்சியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

இந்திய அரசியல் சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியல் சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர். 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் நந்தா கே.செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி.  
ஜவஹர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். 
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சுப.நாகராஜ் தலைமையில் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர் தலைமையில்  நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதுபோல பல்வேறு தொழில்சங்க நிர்வாகிகளும் மாலை அணிவித்தனர்.
திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.சரவணன் தலைமையிலான காங்கிரஸார் கீழரண்சாலையிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com