கிறிஸ்து அரசர் கோயில் பெருவிழா

திருச்சி சுப்பிரமணியபுரம் பென்சினர் காலனியிலுள்ள கிறிஸ்து அரசர் கோயில் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.

திருச்சி சுப்பிரமணியபுரம் பென்சினர் காலனியிலுள்ள கிறிஸ்து அரசர் கோயில் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.
அர்ச்சிக்கப்பட்ட கிறிஸ்து அரசரின் கொடி பொன்மலை வட்டார அதிபர் ஏ.சின்னப்பனால் ஏற்றப்பட்டு திருப்பலி மற்றும் மறையுரை வழங்கப்பட்டது.  இரண்டாம்நாள் திருப்பலி மற்றும் மறையுரையை பங்குத் தந்தையர்கள் ஜான்பீட்டர், ஜோசப் அடிகளார் வழங்கினர். அதைத் தொடர்ந்து  மின் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடைபெற்றது.
நிறைவு நாள் திருப்பலியை தூயபவுல் இறையியல் கல்லூரி அதிபர் முனைவர் ஆரோக்கியராஜ் அடிகளார்  வழங்கிய பின்னர் கொடியிறக்கம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள்,  நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com