துறையூரில் சட்ட விரோதமாக மது விற்றவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
துறையூர் திருச்சி சாலையிலிருந்து தியாகி சிங்காரவேலர் தெரு செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார், மது விற்றுக் கொண்டிருந்த திருத்தலையூர் காளியப்பன் மகன் செந்திலை(24) கைது செய்து, அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.