திருச்சி பெல் வளாகத்தில் நாடு முழுவதும் உள்ள பெல் நிறுவனங்களுக்கு இடையிலான தடகளம் மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
பெல் கைலாசபுரத்திலுள்ள சமுதாய மன்றம் மற்றும் ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி பெல் செயல் இயக்குநர்ஆர்.ராஜா மனோகர் பூப்பந்தாட்டம் மற்றும் தடகளப் போட்டிகளையும் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும் போது, பெல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போட்டிகளில பங்கேற்று தங்களிடம் உள்ள திறமைகளை வெளிகொணர்வதற்கு சரியான வாய்ப்பாக அமையும். விளையாட்டுத் திறன், கூட்டு முயற்சியோடு வீரர்கள் போட்டிகளில் ஆரோக்கியத்துடன் பங்கேற்று விளையாட வேண்டும் என்றார்.
நாடு முழுவதும் உள்ள பெல் நிறுவனங்களின் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் சனிக்கிழமை வரை நடைபெறுகின்றன.