பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீனவர்களை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மக்கள் அதிகாரம் சார்பில், திருச்சியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் திருச்சி ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.
கடலில் தத்தளிக்கும் அனைத்து மீனவர்களை மீட்டு வர வேண்டும். மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கவேண்டும். கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர்தளம் அமைக்க வேண்டும். கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கென்று தனி அலைவரிசை ஏற்படுத்தி தொடர்பை ஒருங்கிணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.