திருச்சி திருவானைக்கா பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருவானைக்கா கீழக்கொண்டையம்பேட்டை தாகூர் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜன் (23). இவரது வீட்டில் கட்டட வேலை நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை மாலை பெரிய இரும்பு கம்பியைத் தூக்கி வரும் போது தெருவிலிருந்த மின்கம்பியின் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலயே உயிரிழந்தார். ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.